×

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுக்குழுவில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்தும், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக சண்முகம் தாக்கல் செய்த பிரதான மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,CHENNAI ,High Court ,Shanmugam ,Vanagaram, Chennai ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...