×

பாலியல் பலாத்காரம் செய்து காதலியை கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

ஆக்ரா: காதலியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் சாட்டா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தலித் பெண் ஒருவருக்கும், போலீஸ் கான்ஸ்டபிள் ராகவேந்திர சிங் (27) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவரும் காதலர்களாக ஜாலியாக இருந்துள்ளனர். முன்னதாக நர்ஸிங் படிப்பு படிக்கும் போது ஒன்றாக இருவரும் படித்ததாகவும், பின்னர் ராகவேந்திர சிங் ஜான்சியில் போலீஸ் கான்ஸ்டபிளாகவும், அந்தப் பெண் குர்கானில் நர்ஸிங் தொழிலுக்கும் சென்றுவிட்டனர். இருந்தாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வார்கள்.

இந்நிலையில் சம்பவ நாளில் வாடகை வீட்டில் இருந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு ராகவேந்திர சிங் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் மீது ஐபிசி பிரிவு 306, 376, எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர், கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ராகவேந்திர சிங் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் அதனால் அவரை கொன்றதாக ராகவேந்திர சிங் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினர்.

The post பாலியல் பலாத்காரம் செய்து காதலியை கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர்: உத்தரபிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Agra ,Chatta, Agra, Uttar Pradesh ,Raghavendra ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...