×

காஞ்சிபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜன.3: காஞ்சிபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சமூக நலத்துறையின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த வழிகாட்டி மையத்தில் காலியாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையிலான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, அக்காலி பணியிடங்களுக்கென குறிப்பிட்டுள்ள கல்வி மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் குறித்து விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வரும் 8ம் தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Violence Against Women Mentor Center ,Kancheepuram ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Guidance Center ,Violence Against Women ,District ,Tamil Nadu Social Welfare Department ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...