×

கம்பத்தில் இருந்து விழுந்து ஒயர்மேன் படுகாயம்

ராசிபுரம், ஜன.3: ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம்(22). ராசிபுரம் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருகில் உள்ள பெரியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் மின் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிவானந்தம் கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயமடைந்த தற்காலிக ஊழியரை மின்வாரிய அதிகாரிகள் யாரும் மருத்துவமனைக்கு வந்து பார்க்காததால் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கம்பத்தில் இருந்து விழுந்து ஒயர்மேன் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Wireman ,Rasipuram ,Sivanandham ,Chandrasekharapuram ,Rasipuram South Power Board ,Manikandan ,Periyur ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...