×

மண்ணச்சநல்லூர் அருகே துணிக்கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

 

சமயபுரம், ஜன.3: மண்ணச்சநல்லூர் அருகே துணிக்கடை ஊழியரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தில் உள்ள சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் காலிராஜன் (48). இவர் திருச்சியில் உள்ள பிரபல துணி கடையில் சேல்ஸ்மேன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு சமயபுரம் வழியாக இனாம் கல்யாணம் உள்ள சக்தி நகருக்கு நடந்து சென்றார்.

அப்போது பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு நடந்து சென்ற காலிராஜனை மறித்து அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க காலிராஜன் கூச்சலிட்டார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காலிராஜனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து காட்டுராஜன் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மண்ணச்சநல்லூர் அருகே துணிக்கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Mannachanallur ,Samayapuram ,Sakthi Nagar ,Inam Kalpalayam village ,Dinakaran ,
× RELATED மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில்...