×

பொதுமக்களை அச்சுறுத்திய 2 ரவுடிகள் கைது

தேன்கனிக்கோட்டை, ஜன.3: தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார், கடந்த 28ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் நொகனுார் அருகே என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்குமார்(39) மற்றும் அலேநத்தம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ்(33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு, தளி போலீஸ் ஸ்டேஷனில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பொதுமக்களை அச்சுறுத்திய 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,SI Jaiganesh ,Dhenkanikottai Government Boys High ,School ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு