×

திருமானூர் அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைப்பு

 

அரியலூர்,ஜன.3: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். விவசாயியான இவர் அவரது மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார். அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கரும்பை சாத்தமங்கலம் அருகே உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக நேற்று முன்தினம் ஒரு ஏக்கர் அளவில் கரும்பை வெட்டி கோத்தாரி சர்க்கரை ஆலைக்கு அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து மற்ற 2 ஏக்கர் கரும்பையும் அறுவடை செய்ய இருந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது வயலுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் 2 ஏக்கரில் இருந்த கரும்பு மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்காக போடப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பைப் லைன் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தது. இது குறித்து மணிவேல் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகாரும், மாவட்ட கலெக்டருக்கு மனுவும் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமானூர் அருகே கரும்பு தோட்டத்திற்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumanoor ,Ariyalur ,Manivel ,Thiruvenkanur ,Thirumanur ,Ariyalur district ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி