×

2 மாத ஊதியம் வழங்க கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர்,ஜன.3: 2 மாத ஊதியம் வழங்க கோரி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் அடையாள வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாத ஊதியம் வழங்காத பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத் தைக்கண்டித்து குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று பகல் 1 மணியளவில் அடையாள வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகவும் குறைவான ஊதியம் பெறும் கவுரவ விரிவுரையாளர்கள், மற்றும் ஆசிரியரல்லாத அலுவலக பணியாளர்களின் ஊதியத்தை அந்தந்த மாதமே கொடுத்திட வேண்டும். இன்னும் வழங்கப்படாத கடந்த நவம்பர், டிசம்பர் ஆகிய இரண்டு மாத ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். இன்னும் அரசு கருவூல ஊதியப்பட்டியலில் சேர்க்கப்படாத கவுரவ விரிவுரையாளர்களையும், ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரையும் விரைந்து கருவூல ஊதியப்பட்டியலில் சேர்த்து பணிப் பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்.

விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து நேற்று நடைபெற்ற வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளரும், ஒருங்கிணைப்பாளருமான சந்திரமவுலி மற்றும் பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரியுரையாளர்களும், ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்களும் பங்கேற்றனர்.

The post 2 மாத ஊதியம் வழங்க கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Government ,PERAMBALUR ,STATE COLLEGE OF ARTS AND SCIENCES ,KURUMBALUR ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை