×

ஆக்கிரமிப்பு ஊரணியை மீட்டுத்தர வேண்டும்: கிராமமக்கள் கலெக்டரிடம் புகார்

 

சிவகங்கை, ஜன.3: இளையான்குடி அருகே பஞ்சனூர் காலனி மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில்:இளையான்குடி தாலுகா புதுக்கோட்டை ஊராட்சி பஞ்சனூர் காலனியில் வசித்து வருகிறோம். பஞ்சனூரில் எங்கள் கிராமத்திற்கு சொந்தமான ஊரணி மற்றும் இடம் உள்ளது. இந்த ஊரணி அரசால் 1994ம் ஆண்டு வெட்டப்பட்டு, அதில் இருந்து நீர் எடுத்து எங்களது காலனியில் வீடுகள் கட்டப்பட்டது.

இந்த ஊரணியை தொடர்ந்து நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் இந்த ஊரணி தனக்கு சொந்தமானது என கூறி அதை பயன்படுத்த முயன்று வருகிறார். இந்த ஊரணி வெட்டப்பட்டதில் இருந்து அரசால் இரண்டு முறை பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஊரணியையும், இடத்தையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்பு ஊரணியை மீட்டுத்தர வேண்டும்: கிராமமக்கள் கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Panchanur Colony ,Ilaiyankudi ,Ilayankudi Taluk Pudukottai Panchayat ,Panchanur ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்