×

புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் மார்கழி சஷ்டி வழிபாடு கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

க.பரமத்தி, ஜன. 3: மது பாட்டில் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பனையம்பாளையம் அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதிக்கு சின்னதாராபுரம் எஸ்ஐ திருப்பதி மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி மகேஸ்வரிசக்தி (40) மதுவிற்பது தெரியவந்ந்தது அவரிடம் இருந்து 5 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரிக்கின்றனர். வேலாயுதம்பாளையம், ஜன.3: கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்கழி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணியசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிசுவாமி கோயில் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் மார்கழிமாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

The post புகழிமலை பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் மார்கழி சஷ்டி வழிபாடு கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Margazhi Sashti ,Pugazhimalai ,Balasubramanya Sami Temple ,K. ,Paramathi ,K. Paramathi Union ,Chinnadharapuram ,Ambedkar ,Panayambalayam ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்