×

கடலூர் மீனவர்கள் புதுவையில் சிறைபிடிப்பு

கடலூர்: கடலூர் அருகே தாழங்குடா மீனவர் கிராமம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் நேற்று காலை ஒரு பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதிக்கு சென்று கணவாய் மீன்களை பிடித்துள்ளனர். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், 7 பேரையும், பைபர் படகையும் சிறை பிடித்து சென்றனர். மேலும் அவர்களை ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார், வீராம்பட்டினம் போலீசாரிடமும், புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தாழங்குடா பகுதியை சேர்ந்த 7 மீனவர்களையும், பைபர் படகையும் வீராம்பட்டினம் மீனவர்கள் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கடலூர் மீனவர்கள் புதுவையில் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Puduvai ,Thalanguda ,Veerambattinam ,Puducherry ,Puduwai ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை