×

உண்டியல் சேமிப்பை நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவன்

ஆரணி: தமிழகத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி, நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் பரிதி. தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.375ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ஆரணி ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்று ஆர்டிஓ தனலட்சுமியிடம் வழங்கினார்.

The post உண்டியல் சேமிப்பை நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவன் appeared first on Dinakaran.

Tags : Arani ,Tamil Nadu ,Chennai ,Southern ,Mohan ,Nadupattu Village ,Vinnamangalam Panchayat ,Tiruvannamalai District ,
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...