- பெரியார் பல்கலைக்கழகம்
- ராம்தாஸ்
- சென்னை
- ட்விட்டர்
- பாமா
- ராமதாஸ்
- சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
- துணை
- வேந்தர்
- தின மலர்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக்கால பிணையில் வந்துள்ள துணைவேந்தர் ஜெகநாதன் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. துணைவேந்தர் போன்ற உயர்பதவிகளில் அப்பழுக்கற்றவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை கைது செய்ய வேண்டும்.
The post பெரியார் பல்கலை. துணை வேந்தரை சஸ்பெண்ட் செய்யவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.