×

இந்திய அணி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே.எல் ராகுல் 6வது இடத்தில் தான் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கர்

கேப்டவுன்: இந்திய அணி இனி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே.எல் ராகுல் நடுவரிசையில் 6வது இடத்தில் தான் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: “இந்திய அணியில் கே.எல் ராகுல் நடு வரிசையில் விளையாடுவதால் அணிக்கு பல நன்மைகள் கிடைத்திருக்கிறது. அவர் ரன்களை நகர்த்தும் வீரராக இருக்கிறார். இந்திய அணிக்காக அவர் பல இடங்களில் விளையாடி இருக்கிறார். தற்போது கீழ் வரிசை வீரர்கள் மற்றும் பவுலருடன் இணைந்து விளையாட கூடிய தகுதி கேஎல் ராகுலுக்கு மட்டும் தான் இருக்கிறது.

கே.எல் ராகுலை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் நடுவரிசையில் தான் விளையாட வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய அணி இனி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே.எல் ராகுல் நடுவரிசையில் 6வது இடத்தில் தான் விளையாட வேண்டும்.

செஞ்சூரியன் மைதானத்தில் கே.எல் ராகுல் 2021 மற்றும் 2023 என இரண்டிலுமே சதம் அடித்திருக்கிறார். ஒரு இடத்தில் நாம் சிறப்பாக விளையாடிவிட்டால் அது தொடர்பாக நல்ல நினைவுகள் நம்முடன் இருக்கும். அதே மைதானத்திற்கு நாம் திரும்பி செல்லும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய அணி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே.எல் ராகுல் 6வது இடத்தில் தான் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கர் appeared first on Dinakaran.

Tags : KL Rahul ,Sanjay Pankar ,Cape Town ,Indian ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்