நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். நிவாரண தொகையை பெறுவதற்கு நாளையே கடைசி நாள் என்றும் டோக்கன் பெற்றவர்கள், நாளை கட்டாயம் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடைசி நாளான நாளை மாலை 5 மணி வரை நிவாரண தொகை வழங்கப்படும்.
The post “நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: நெல்லை ஆட்சியர் appeared first on Dinakaran.