- தென்கிழக்கு அரேபிய கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை வானிலை மையம்
- சென்னை
- தென் கிழக்கு அரேபிய கடல் பிராந்தியம்
சென்னை: தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறும் என்பதால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போதுதென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. இதற்கிடையே, கரூர் பகுதியில் 93 டிகிரி வெயில் நிலவியது. அதன் தொடர்ச்சியாக இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உணரப்பட்டது. மேலும், திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் 5 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக வெப்பநிலை இருந்தது.
இந்நிலையில், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று வடமேற்கு திசையில் நகர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டது. அது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று மாறி தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.
The post தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தம் தமிழ்நாட்டில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.