×

கமாண்டோ படை மீது துப்பாக்கி சூடு மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: டெல்லி விரைகிறது மாநில குழு

இம்பால்: மாநில கமாண்டோ படையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலைத் தொடர்ந்து, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மாநில உயர்மட்ட குழு டெல்லி விரைகிறது. மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்டீஸ், குக்கி பிரிவினர் இடையே நீடித்த மோதல் கடந்த மே 3ம் தேதி கலவரமாக வெடித்தது. இதுவரை கலவரத்தில் 180க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுவரையிலும் அம்மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படாமல் உள்ளது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, மியான்மர் எல்லையை ஒட்டி, தெங்நவ்பால் மாவட்டத்தில் உள்ள மோரே நகரில் மாநில காவல் துறையின் கமாண்டோ படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். தாக்குதலில் காயமடைந்த 5 வீரர்கள் இம்பாலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது டிவிட்டரில், ‘‘ நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய, மாநில பாதுகாப்பு படைகள் வலுவான மற்றும் விரிவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்’’ என கூறி உள்ளனர்.

மேலும், அவர், பாஜ மாநில தலைவர் சாரதா தேவி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றம் கட்சி தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.  இதைத்தொடர்ந்து, மாநில அரசு பிரதிநிதிகள் விரைவில் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து மணிப்பூர் நிலவரத்தை விளக்க இருப்பதாக முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

The post கமாண்டோ படை மீது துப்பாக்கி சூடு மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: டெல்லி விரைகிறது மாநில குழு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Delhi ,Imphal ,Meites ,Kuki ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் காரணமாக பெய்த தொடர்...