×

பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பில் குறைந்த பட்சம் ரூ.1,500 மற்றும் முழு கரும்பு ஒன்று அவசியம் இடம் பெற வேண்டும்.குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த வருடப் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக கொடுக்க வேண்டும்.

கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்.பொங்கல் தொகுப்பில் உள்ளவை தரமானதாக, பயனுள்ள வகையில் இருப்பதை முன்னதாகவே தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசு, தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

The post பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்: ஜி.கே வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : G. K Vasan ,Chennai ,Tamaga ,G. ,K Vasan ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளரை...