- எடப்பாடி
- அமைச்சர்
- செலூர் ராஜு
- மதுரை
- முன்னாள் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை: விக்ரமாதித்தன் கதை போல எடப்பாடி பழனிசாமி மீண்டும் சாகசங்களை தொடர்ந்து நிகழ்த்துவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘ 2023ம் ஆண்டில் இருந்த விரும்பத்தகாத நிகழ்வுகள், புதிய வைரஸ் தாக்குதல் போன்றவை இந்த புதிய ஆண்டில் இல்லாமல் மகிழ்ச்சியான ஆண்டாக மலர வேண்டும். அதிமுகவிற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை மீண்டும் உருவாக்குகிற வகையில், விக்ரமாதித்தன் கதை போல எடப்பாடி மீண்டும் சாகசங்களை தொடர்ந்து நிகழ்த்துவார்’என்றார்.
The post எடப்பாடி சாகசம் நிகழ்த்துவார்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.