×

புத்தாண்டில் சோகம்: திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி முத்து சென்னைக்கு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் தாய், மனைவி மற்றும் இரு மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

நேற்றிரவு அவர்கள் தூங்கிகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர்களின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்க வந்தனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனை அடுத்து அரியமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் அக்கம்பக்கதினர் தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த தீணைப்புதுறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரை மீட்டனர். ஆனால் அந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழ்நதனர். அவர்களது உடலை மீட்ட தீயணைப்புதுறையினர் 4 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேற்கூரை இடிந்த வீடானது 1972-ம் ஆண்டு கட்டபட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

The post புத்தாண்டில் சோகம்: திருச்சி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : New Year ,Trischi ,Trichy ,Marimuthu ,Ariyamangalam ,Shanti ,Vijayaletshmi ,Pradeepa ,Harini ,Mari ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!