×

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி கோவை மாணவர்கள் மாநில அளவில் 2ம் இடம் பிடித்தனர்

 

கோவை, ஜன.1: மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி அரக்கோணத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். கியோருகி மற்றும் பூம்சே முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை மாவட்டம் சார்பாக சாய் டேக்வாண்டோ பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிவி பிரிவில் கிஷோர்கரன் 2 தங்கமும் 1 வெண்கலமும் வென்றார்.

அஷ்வின் டி.கே 1 தங்கம் ,2 வெண்கலப் பதக்கம் வென்றார். நகுல் பி.ஆர் 2 தங்கம், 1 வெள்ளி வென்றார்.பாத்திமா 1 வெண்கலம் வென்றார்.கேயா பீ.ஆர் 1 வெண்கலம், 1 வெள்ளி வென்றார்.சப்.ஜூனியர் பிரிவில் முகிலன் 2 வெண்கலம்,தனிஷ் 1 தங்கம்,1 வெள்ளி,மொகமத் ஷோயத் மற்றும் சாய் தர்ஷன் தலா 1 வெண்கலப் பதக்கம் வென்றனர்.கேடட் பிரிவில் ரிஷிகேஷ் 2 தங்கம்,விஜய சரஸ்வதி 1 தங்கம், திவ்யஸ்ரீ 1 தங்கம் வென்றனர்.

சீனியர் பிரிவில் மஹா நதியா மற்றும் சரத் குமார் ஆகியோர் தலா 1 வெள்ளியும் வென்றனர்.மொத்தம் 10 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் வென்ற கோவை வீரர்கள் மாநில அளவில் 2ம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பயிற்சியாளர் சுதர்ஷன் தன் பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்த போட்டியில் தங்கம் வென்றவர்கள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி கோவை மாணவர்கள் மாநில அளவில் 2ம் இடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Arakkonam ,Tamil Nadu ,Sai ,Keorugi ,Poomche ,Taekwondo ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...