×

கார் கவிழ்ந்து பெண் படுகாயம்

மேல்மலையனூர், டிச. 31: பெங்களூர் சிட்டிலைட் பகுதியில் வசித்து வரும் ஹேமந்த் பாபு மகள் நிகிதா பானு (23), தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் விடுமுறை கொண்டாட்டத்திற்காக புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் வனப்பகுதி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிக்கிதா பானுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் கவிழ்ந்து பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Hemant Babu ,Nikita Bhanu ,Bangalore ,Puducherry ,Villupuram District Senchi ,Perungapur ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...