- முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- பிச்சம்பாளையம்புதூர்
- திருப்பூர்
- முதல் அமைச்சர்
- மக்களுடன் திட்ட சிறப்பு முகாம்
- பிச்சம்பாளையம் புதூர்
- 17 வது வார்டு
- திருப்பூர் கார்ப்பரேஷன்
- செல்வராஜ்
- சட்டமன்ற உறுப்பினர்
- மேயர்
- தினேஷ் குமார்
- மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- பிச்சம்பாளையம்புதூர்
திருப்பூர், டிச.31: மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் திருப்பூர் மாநகராட்சி 17 வது வார்டு பிச்சம்பாளையம் புதூர் அருகே நடைபெற்றது. முகாமை செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களின் இருப்பிடத்திலேயே நிவர்த்தி செய்தல் குறித்த முகாமினை பார்வையிட்டு, பொதுமக்கள் கணினி மூலம் பதிவு செய்த கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுக்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், தெற்கு மாநகர செயலாளர் டிகேடி மு.நாகராஜ். 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாநகர பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையாளர் முருகேசன், பகுதி செயலாளர்கள் போலார் சம்பத், ஜோதி, திமுக வார்டு செயலாளர்கள் மயில்சாமி,
ஜானகிராமன், செல்வராஜ், மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
The post பிச்சம்பாளையம்புதூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.