×

அவசரகால மருத்துவ சிகிச்சை மைய பணியிடங்களுக்கு ஆட்தேர்வு முகாம்: ஜன.2, 3ம் தேதிகளில் நடக்கிறது

 

மதுரை, டிச. 31: அரசின் சுகாதார துறை சார்பில் இயங்கும் அவசர கால மருத்துவ சிகிச்சை மையத்திற்கான ஆட்தேர்வு முகாம் வரும் ஜன.2, 3ம் தேதிகளில் நடக்கிறது. சாலை விபத்தில் காயம் அடைந்தோருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் காக்கும் வகையில் அரசின் அவசர கால சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. சுகாதார துறை திட்டத்தின் கீழ் ஐஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த அவசர கால சிகிச்சை மையம் இயங்குகிறது. மக்களுக்கு அவசர மருத்துவ சேவை வழங்கிடும் விதமாக சுமார் 12 மையங்கள் உள்ளன.

தற்போது இம்மையத்திற்கு செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆண், பெண் பணியாளர்கள் தேர்வு முகாம் நடக்கிறது.பிஎஸ்சி நர்சிங், ட்ரூமா கேர், அவசர மருத்துவ சிகிச்சை டெக்னீஷியன், ஏபிஜிடிஐசி, ஜிஎன்எம் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியம் வழங்கப்படும். சுழற்சி முறையில் மூன்று ஷிப்டுகளாக பணி நேரம் இருக்கும். தற்போது அச்சரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கும்மிடிப்பூண்டி மகாபலிபுரம், சந்தவேலூர் ஆகிய இடங்களில் காலிப்பணியிடம் உள்ளது.

இதற்கான நேர்முகத் தேர்வு வரும் ஜன.2, 3ம் தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்வு சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஐஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் அலுவலகத்தில் நடக்கிறது. கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, sornamugi_r@emri.in மற்றும் john_fernandez@emri.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும் மூலமும், 75500 – 52551, 98403 – 65462 செல்போன் எண்களில் வாட்ஸ்அப் மூலமும் அனுப்பலாம் என அரசின் அவசர கால சிகிச்சை மைய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவசரகால மருத்துவ சிகிச்சை மைய பணியிடங்களுக்கு ஆட்தேர்வு முகாம்: ஜன.2, 3ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Camp ,Medical Treatment Center ,Madurai ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு