×

சொந்த ஊர் அருகிலேயே 31 கிராம உதவியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கல்: அரசுக்கு நன்றி தெரிவிப்பு

 

மதுரை, டிச. 31: சொந்த ஊர் அருகிலேயே 31 கிராம உதவியாளர்களுக்கு பணியி்ட மாறுதல் வழங்கியதற்காக, அரசு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரைச சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ஊழியர்களின் விருப்பத்தின் பேரிலும், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும், பிஎல்ஓவாக இருக்கும் கிராம உதவியாளர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகிலேயே பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக அதிக தூரத்திலிருந்து பணிக்கு வந்து செல்லும் பெண்களின் சிரமத்தை தீர்க்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு மேலூர் தாலுகாவில் பணிபுரிந்த 31 வருவாய் துறை கிராம உதவியாளர்களை மேலூர் வட்டாட்சியர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகிலேயே பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். இதற்காக கிராம உதவியாளர் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மணிகண்டன், கல்யாணி, மேலூர் வட்டக்கிளை தலைவர் பழனிவேலு உள்பட பலரும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

The post சொந்த ஊர் அருகிலேயே 31 கிராம உதவியாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கல்: அரசுக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Govt ,Madurai ,Tamil Nadu government ,Tamil Nadu Government Employees Association ,Revenue Department ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...