×

பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை உத்தரவு

சென்னை: பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்டவுன் இன்று துவங்க உள்ளது. ராக்கெட் ஏவும் நேரங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி இன்று மாலை முதல் நாளை வரை பழவேற்காடு மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொன்னேரி மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

The post பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: மீன்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Fisheries Department ,CHENNAI ,Palavekadu ,Satish Dhawan ,Sriharikota, Andhra Pradesh ,Fishery ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!