×

மிக்ஜாம் புயலின்போது சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா: பாபு எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: மிக்ஜாம் புயலின்போது சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதிக்குட்பட்ட இலத்தூர், சித்தாமூர் ஒன்றியங்களில் மிக்ஜாம் புயலின் போது சிறப்பாக பணியாற்றிய அனைத்துத் துறை அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் ‘‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’’ நிகழ்ச்சி நுகும்பல் ஊராட்சியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கினார். சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, செங்கல்பட்டு மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அருணாச்சலம், மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குநர் அசோக்குமார், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி, மதுராந்தகம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை, செய்யூர் வட்டாட்சியர் சரவணன்‌‌ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார்.

இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு பேசுகையில், மிக்ஜாம் புயல் மழையின்போது செய்யூர் தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய மின்சாரம், வேளாண்மை, சுகாதாரம், காவல் உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி. ‘‘நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ’’ நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து 10 ஆயிரம் பேருக்கு கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பட்டா வழங்கும் திட்டத்தின் மூலம் பட்டாக்களை வழங்க அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு முடிக்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், கௌரி, அன்பரசு, வட்டார மருத்துவ அலுவலர் ரங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், விசிக மாவட்டச் செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆதவன், திமுக ஒன்றிய‌ச் செயலாளர் ராமச்சந்திரன், சித்தாமூர் துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், நிர்வாகிகள் வரதராஜன், நாகப்பன், குமுதம் மதுரை, முரளி, பாஸ்கர், குப்பன், சிம்பு, கண்ணன், லோகநாதன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சித்தாமூர், லத்தூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கழக முன்னோடிகள், அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார் நன்றி கூறினார்.

The post மிக்ஜாம் புயலின்போது சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு விழா: பாபு எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Migjam storm ,Babu ,MLA ,Madhurandakam ,Seyyur MLA ,Panaiyur Babu ,Mikjam storm ,Ilattur ,Chittamur ,Seyyur ,Chengalpattu ,Mikjam storm: Babu MLA ,Dinakaran ,
× RELATED புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ...