×

திருப்புலிவனம் கல்லூரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் அரசு கலைக்கல்லூரி அருகே 3 இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்ஐ சந்திரசேகர், போலீசார் சங்கர் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று கண்காணித்தபோது, 3 இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், 3 இளைஞர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர்கள் செவிலிமேடு, பெரிய தெருவைச் சேர்ந்த விக்ரம் (19), ஓரிக்கை வர்த்தமானன் நகரைச் சேர்ந்த தனுஷ் (20), செவிலிமேடு வள்ளலார் நகரைச் சேர்ந்த சிவக்குமார் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்த சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருப்புலிவனம் கல்லூரி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupulivanam College ,Kanchipuram ,Liquor Enforcement Department ,Tirupulivanam Government Arts College ,Kanchipuram district ,Prohibition Enforcement Department ,SI Chandrasekhar ,Shankar ,Arikrishnan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...