×

காரைக்காலில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்

காரைக்கால்,டிச.30: காரைக்காலில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை கலெக்டர் குலோத்துங்கன் வழங்கினார். காரைக்கால் மாவட்டம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக பிரதம மந்திரியின் \”டி.பி. முக்த் பாரத் அபியான்\” என்ற திட்டத்தின் மூலம் காசநோய் இல்லா பாரதமாக மாற்றுவதன் நோக்கில் காரைக்கால் மாவட்டத்தில் தொடர் சிகிச்சை பெரும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உடல் ஆரோக்கிய ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பையை வழங்கபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவம்பர் மாதத்திற்கான சுமார் 99 காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வழங்கினார். இந்த ஊட்டச்சத்து பொருட்களை காரைக்கால் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர். சிவராஜ்குமார், நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளார் டாக்டர். தேனாம்பிகை, காசநோய் மருத்துவர் டாக்டர்.கோகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Kulothungan ,Karaikal District Health and Family Welfare Department ,T.P. ,India ,Mukt Bharat Abhiyan ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...