×

ஆலங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

 

தஞ்சாவூர், டிச.30: அம்மாப்பேட்டை ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வன் திட்டமுகாம் நேற்று நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவர் முத்துச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ராதிகா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செந்தமிழ் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊராட்சி) விஜய் ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்துறை, காவல் துறை, உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

The post ஆலங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Alangudi panchayat ,Thanjavur ,Tamil Nadu ,Ammapet ,Ammapet Union Committee ,President ,Kalaichelvan ,District Panchayat Committee ,Deputy Chairman ,Muthuchelvan ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...