×

மேலூரில் போக்குவரத்து ஊழியர்கள் நோட்டீஸ் விநியோகம்

 

மேலூர், டிச. 30: மேலூரில் அரசு ேபாக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தாங்கள் நடத்தவுள்ள வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீசை ெபாதுமக்களுக்கு வழங்கினர். அந்த நோட்டீசில், ‘தமிழக அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 4 ஆயிரம் பஸ்கள் குறைக்கப்பபட்டுள்ளது. எனவே நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டியவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் முருகேசன், மனோகர், சங்கரலிங்கம், நம்பிராஜன், பெரியசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மேலூரில் போக்குவரத்து ஊழியர்கள் நோட்டீஸ் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Mellore ,Federation of Retirement Parents' Welfare Societies ,Transport Clubs ,Malur ,Debadums ,Dinakaran ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை