×

வி.கே.புரம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் குண்டுகல் கடத்திய 3 பேர் கைது

நெல்லை, டிச. 30: வி.கே.புரம் அருகே உரிய அனுமதியின்றி குண்டு கற்களை டிராக்டரில் ஏற்றி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டரை பறிமுதல் செய்தனர். வி.கே.புரம் காவல் நிலைய எஸ்ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் உரிய அனுமதியில்லாமல் குண்டு கற்களை டிராக்டரில் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி உரிய அனுமதியில்லாமல் குண்டு கற்களை டிராக்டரில் ஏற்றி வந்த அருணாசலபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த அய்யாகண்ணு (36), வடமலைசமுத்திரம் மேற்கு தெருவை சேர்ந்த உலகநாதன் (19), வி.கே.புரம் பசுக்கிடைவிளையை சேர்ந்த மது (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் டிராக்டரையும், ஒரு யூனிட் குண்டு கற்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post வி.கே.புரம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் குண்டுகல் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : VK Puram ,Nellie ,VKpuram ,VKpuram police ,SI Isakkiraja ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...