×

உக்ரைன் மீது ஏவுகணை மழை

கீவ்: ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியது. 22 மாதங்கள் ஆன பின்னரும் போர் முடிவடையவில்லை. விரைவில் இரண்டாவது ஆண்டை எட்ட உள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவில் தொடர்ச்சியாக பல நகரங்களின் மீது 122 ஏவுகணைகள், 36 டிரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியது. இதில்,7 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,‘‘ ரஷ்யா ஏவிய பெரும்பாலான ராக்கெட்டுகள், டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்றார்.

The post உக்ரைன் மீது ஏவுகணை மழை appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Kiev ,Russia ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...