×

மிஸ்டுகால் மூலம் பாஜவில் சேர்ந்த எஸ்எஸ்ஐகள் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

நாகை: நாகையில் என் மண் என் மக்கள் என்ற பிரசார நடைபயணத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மேற்கொண்டார். நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் செல்போன் மூலம் மிஸ்டுகால் கொடுத்து பாஜவில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிக்காக பாஜக சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வெளிப்பாளையம் எஸ்எஸ்ஐகள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோர் அந்த பந்தலுக்கு சென்று தங்களது செல்போன் மூலம் மிஸ்டுகால் கொடுத்து பாஜவில் தங்களை உறுப்பினராக சேர்த்து கொண்டனர்.

இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்எஸ்ஐ கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரிடம் நாகை எஸ்பி ஹர்ஸ்சிங் நேற்று விசாரணை நடத்தி அறிக்கையை தஞ்சை சரக டிஐஜி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பாஜவில் உறுப்பினராக சேர்ந்த எஸ்எஸ்ஐக்கள் 2 பேரையும் நாகை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

The post மிஸ்டுகால் மூலம் பாஜவில் சேர்ந்த எஸ்எஸ்ஐகள் 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Bajaj ,Mistugal ,President ,Bahia ,Annamalai ,Puka ,Nagai Public Office Road ,Dinakaran ,
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி