×

காஞ்சிபுரத்தில் திமுக நெசவாளர் அணி சார்பில் விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று மாலை திமுக நெசவாளர் அணி சார்பில் கைத்தறி நெசவாளர் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி துவங்கியது.சென்னை, காஞ்சிபுரம் மண்டல திமுக நெசவாளர் அணி சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்களின் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெசவாளர் அணி செயலாளர் தி.அன்பழகன் வரவேற்றார். துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், செயலாளர்கள் கே.எம்.நாகராஜன், சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்று, கைத்தறி நெசவாளர்களுக்கு திமுக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இதில் மாநகர செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு சிகாமணி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வ.மலர்மன்னன், மாநகர அமைப்பாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் கோ-ஆப்டெக்ஸ், ஈரோடு, சேலம், பவானி, மதுரை, திருப்புவனம், ஆரணி, திருப்பத்தூர், கரூர், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் உள்பட பல்வேறு மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் தங்களின் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளது. இதில் ரூ.1500 முதல் கைத்தறி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் திமுக நெசவாளர் அணி சார்பில் விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK Weaver ,Kancheepuram ,Kanchipuram ,Chennai, ,Dinakaran ,
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...