×

திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம்

*உடனடியாக அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி கோவிந்தராஜ் நகரில் குப்பைகள் குவிந்து உள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற ஊராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு கோவிந்தராஜ் நகரில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கோவிந்தராஜ் நகர் முதல் தெரு, இரண்டாவது தெரு மூன்றாவது தெரு மற்றும் மெயின் ரோடு உள்ளன. இதில் முதல் தெருவும் மெயின் ரோடும் சந்திக்கும் இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் வாகனங்களில் சொல்வோரும் குப்பைகளை வீசி விட்டு செல்வதால், மலை போல் குவிந்து கிடக்கிறது. இங்குள்ள தெருக்களில் சேரும் குப்பைகளை வீடுகளில் வந்து தூய்மை பணியாளர்கள் வாங்கி வந்தனர். சமீபகாலமாக பணியாளர்கள் வராததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி தெருக்களில் குவிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் தெருவுக்கு குப்பை வண்டிகளை வரச் சொன்னால் வீடு வீட்டுக்கு குப்பைகளை கொட்ட தயாராக உள்ளோம்.
ஆனால் துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை, ஆதலால் குப்பைகளை எங்கு போடுவது என்று தெரியாமல் ரோடுகளில் வீசி செல்கின்றனர். இதனை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

The post திண்டுக்கல் கோவிந்தராஜ் நகரில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் தொற்று பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Govindaraj Nagar ,Dindigul ,Dindigul Balakrishnapuram panchayat Govindaraj Nagar ,Govindaraj ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...