×

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்துக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல், ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளனர். திரையுலகினர், அரசியல் தலைவர்கள், மக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முழு அரசு |மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை 6.10 மணிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்துக்கு மாலை 4.45 மணி அளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

The post சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Tags : Vijayakanth Funeral ,Demudika ,Coimpet, Chennai. ,Chennai ,Office ,Coimpet, Chennai ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்