×

‘ஒரு பெரிய சகாப்தம் முடிந்தது’.. விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் நேரில் அஞ்சலி..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தங்களது இரங்கலை சென்னை தீவுத்திடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராதாரவி, டெல்லி கணேஷ், வாகை சந்திரசேகர், இயக்குநர் வெற்றிமாறன் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சின்னத்திரை நடிகர்கள் பாலா, நிஷா, அமுதவாணன், புகழ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்கள்.

“அவன் எங்கள விட்டு பிரிவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல” என்று நடிகர் விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் நடிகர் ராதாரவி பேசிக்கொண்டிருக்கும்போதே தேம்பி தேம்பி அழுதார்.

“விஜயகாந்த் சம்பாதித்தது பணம் அல்ல மக்களின் மனம். இந்த மாதிரியான கூட்டத்தை சென்னையில் பார்த்திடாத அளவுக்கு உங்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்!” என்று நடிகர் டெல்லி கணேஷ் இரங்கல் தெரிவித்தார்.

“சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்..” என்று இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம் சூட்டினார்.

“ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு” என்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் வாகை சந்திரசேகர் உருக்கமாக தெரிவித்தார்.

“விஜி பணம் சம்பாதிக்கல; மக்கள சம்பாதிச்சிருக்கார்..” “அவர் மட்டும் நல்லா இருந்திருந்தா” – என்று டெல்லி கணேஷ் தெரிவித்தார்.

“எனக்கு சோறு போட்ட தாய் அண்ணன் விஜயகாந்த்” என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.

“கேப்டன் தான் என்னோட இன்ஸ்பிரேஷன்.. அவர 5வது படிக்கும்போது பார்த்தது மறுப்படியும் இப்போதான் பாக்குறேன்..” நடிகர் பாலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

The post ‘ஒரு பெரிய சகாப்தம் முடிந்தது’.. விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : VIJAYAKAND ,Chennai ,Chena ,Demutika ,Vijayakanth ,SINNATHRA ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...