×

ஊழல், முறைகேடு புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வங்கி கணக்குகளில் போலீஸ் ஆய்வு..!!

சேலம்: ஊழல், முறைகேடு புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வங்கி கணக்குகளில் போலீஸ் ஆய்வு நடத்தி வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் சேலம் மாநகர போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கனரா வங்கி கிளையில் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் ஆகியோரின் வங்கி கணக்குகள் உள்ளன. எந்தெந்த வகையில் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன? யார் யாரிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளது என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டால் இருவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்படலாம்.

The post ஊழல், முறைகேடு புகாரில் கைதான சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் வங்கி கணக்குகளில் போலீஸ் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Minister ,Jehanathan ,Salem ,Vice Chancellor ,Salem Municipal Police ,Canara Bank ,JEKANATHAN ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...