×

கொழிஞ்சாம்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை 77 வயது முதியவர் கைது

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே நடுப்புணி சோதனைச்சாவடி பகுதியில் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு மாவட்டம் கேரள-தமிழக எல்லை நடுப்புணியில் வணிகவரித்துறை சோதனைச் சாவடியின் பாழடைந்த கட்டடம் உள்ளது. இங்கு கர்நாடகாவைச் சேர்ந்த அம்மிக்கல் கொத்திப் பிழைக்கின்ற ஏழை தம்பதியர் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் தங்கியிருந்தனர்.

இவர்கள் பகலில் கல் கொத்துக்கின்ற தொழிலுக்கு சென்று, மாலையில் பாழடைந்த கட்டடத்திற்கு திரும்பி சமையல் செய்து சாப்பிட்டு விட்டு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இவர்களின் பழக்க வழக்கங்களை நோட்டமிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை இவர்களுடன் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமியை தூக்கிச் சென்று புதர்காட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் குழந்தை கூச்சல் போட்டுள்ளது. குழந்தையின் அழு குரல்கேட்டு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து முதியவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் எருத்தியாம்பதி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட வில்லுன்னி தரகன்களத்தைச் சேர்ந்த கந்தசாமி (77) என்பது தெரியவந்தது.

சிறுமியை பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொழிஞ்சாம்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை 77 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kojinchamparai ,Palakkad ,Palakkad district ,Commercial Tax Department ,Kerala-Tamil border ,Palakkad district.… ,Kojinchampara ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...