×

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறையில் 3,000 கடைகள் அடைப்பு..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறையில் 3,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகள் அமைத்த நிலையில் வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறையில் 3,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதிகளில் பகல் 12 வரை 3,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர். செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையாரில் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விராலிமலை அருகே மலைக்குடிபட்டியில் கடைகளை அடைத்து விஜயகாந்துக்கு வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறையில் 3,000 கடைகள் அடைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Demutika ,Vijayakanth ,Chennai ,Mayiladu ,Dinakaran ,
× RELATED போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கில்...