சென்னை: தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் வழியே செல்வதை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல வேண்டாம். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்களின் வாகனங்கள் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இலகுரக, இருசக்கர வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்.எல்.ஏ. ஹாஸ்டல் சாலை வழியாக அனுமதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள் வழியே செல்வதை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.