×

கந்தர்வகோட்டை குமரன் காலனியில் தார்சாலை அமைக்கும் பணி

கந்தர்வகோட்டை, டிச.29: கந்தர்வகோட்டை குமரன் காலனியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள குமரன் காலனியில் சாலை பழுது அடைந்து மிக நீண்ட நாட்காளக மக்கள் போக்குவரத்துக்கு சிரமம்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெத்தினவேல் (எ) கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வியிடம் சாலை வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை நிதியில் இருந்து தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து 420 மீட்டர் தூரத்திற்கு புதியதார் அமைக்க உத்தரவிட்டனர். இந்த சாலையை சிறப்பாக அமைந்து தரவேண்டும் என இப்பகுதி இளைஞர்கள் சம்பந்தபட்ட துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

The post கந்தர்வகோட்டை குமரன் காலனியில் தார்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Gandharvakot Kumaran Colony ,Gandharvakottai ,Gandharvakottai Kumaran Colony ,Kumaran Colony ,Pudukottai District, Kandarvakottai ,Gandharvakota Kumaran Colony ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...