×

மதுரையில் இன்று நடக்கிறது வாழ்வாதார சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

மதுரை, டிச. 29: கலெக்டர் சங்கீதா விடுத்துள்ள அறிக்கை: மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவை சான்றிதழ் பெற்றுள்ள நபர்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்பு வழிகாட்டுதல் முகாம் இன்று (டிச.29) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்முகாமில் ஆதரவற்ற விதவைச் சான்று பெற்றவர்கள் தகுதிகளின் அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளோர் மனுஅளித்து பயன் பெறலாம்.

இந்த முகாமில் சுய தொழில் தொடங்க அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் மற்றும் சேவை அமைப்பினர் வழங்கும், குறுகிய கால திறன் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். இதில் மதுரை மேற்கு, வடக்கு மற்றும் வாடிப்பட்டி தாலுகாக்களை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் அதற்கான அரசு சான்று, கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் பங்கேற்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மதுரையில் இன்று நடக்கிறது வாழ்வாதார சிறப்பு வழிகாட்டுதல் முகாம் appeared first on Dinakaran.

Tags : Livelihood Special Guidance Camp ,Madurai ,Collector ,Sangeeta ,Revenue Commissioner ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...