×

ஐஸ் கிரீம் கடைக்காரரிடம் செல்போன் திருட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பேருந்தில் செல்போன் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் அழகேசன் தெருவில் வசித்து வருபவர் தீனதயாளன் (54). இவர் அதே பகுதியில் ஐஸ் க்ரீம் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் தனது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியை காஞ்சிபுரம் அனுப்புவதற்காக தனியார் பேருந்தில் ஏற்றினார். அப்போது, பேருந்தின் பின்பக்க படியில் தனது பேத்தியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஒரு கையில் ஒரு பையை தூக்கிக்கொண்டு பேருந்தில் இவர் ஏறினார்.

பின்னர், உள்ளே சென்று பேத்தியை மகளிடம் ஒப்படைத்துவிட்டு இறங்கும்போது பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை. இது தொடர்பாக தனது மருமகனிடம் கூறியுள்ளார். அவர் காஞ்சிபுரத்தில் உள்ள அந்த சம்மந்தப்பட்ட தனியார் பேருந்தின் அலுவலகத்தில் சென்று பேருந்தில் பொறுத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை சேகரித்துள்ளார்.

அதில் தாடியுடன் முகக்கண்ணாடி அணிந்திருந்த மர்மநபர் ஒருவர் வீராசாமியின் பையில் இருந்து செல்போனை ஒரு பேப்பரை வைத்து மறைத்து திருடுவது தத்ரூபமாக பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளோடு செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் தீனதயாளன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தனியார் பேருந்தில் செல்போன் திருடிய அந்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஐஸ் கிரீம் கடைக்காரரிடம் செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Deenadayalan ,Alakesan Street, Chengalpattu, Vedachalam Nagar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...