×

காதல் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்ததால் விரக்தி 6 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை கே.கே.நகர் ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் அருண்குமார் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த பார்வதி என்பவரை காதலித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. ஆட்டோ டிரைவரான அருண்குமார் சம்பாதிக்கும் பணத்தை தினமும் குடித்து அழித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேநேரம் பார்வதி காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது வீட்டில் இதுகுறித்து தெரிவிக்க முடியாமலும், குடும்பம் நடத்த பணம் இல்லாமலும் தவித்துள்ளார். மேலும், தனது குழந்தைக்கு கூட தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அருண்குமார் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பார்வதிக்கும், அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அருண்குமார் சற்று கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பார்வதி, நேற்று அதிகாலை கணவன் நன்றாக தூங்கும் நேரத்தில், தனது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்த போது, தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து, பார்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்ததால் விரக்தி 6 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arun Kumar ,Rani Annanagar, KK Nagar, Chennai ,Parvati ,Arunkumar ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை