×

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்

சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் விஜயகாந்த் மறைந்ததாகவும், அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது மைத்துனர் சுதீஷ் அறிவித்தார்.

மியாட் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல், வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இறுதிபயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைகக்ப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடானது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

The post கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUD ,Coimbatore ,CHENNAI ,DMDK ,Demuthika ,Coimbatore, Chennai ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது