×

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி: தேமுதிக அறிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் கடந்த மாதம் 18ம் தேதி காய்ச்சல், இருமல் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அடுத்த சில நாள்களில் நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டாா். இதன் காரணமாக அவா் படிப்படியாக நலம் பெற்றாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த டிச.11ம் தேதி வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.26ம் தேதி மாலை மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்று(டிச.28) வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; “மருத்துவ பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி: தேமுதிக அறிக்கை appeared first on Dinakaran.

Tags : DEMUTIKA ,PRESIDENT ,VIJAYAKANT ,Chennai ,Temuthika ,Vijayakanth ,TEMUTIKA ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தீவிர...