×

பெண் எஸ்ஐ தாக்கியதில் தூய்மை பணியாளர் தாடை உடைந்தது

கேடிசி நகர், டிச. 28: தென்காசி மாவட்டம், வீ.கே.புதூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (42). நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையில் கணவருடன் சேர்த்து வைக்குமாறு ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். நேற்று விசாரணைக்காக சென்ற நிலையில் அங்கிருந்த பெண் எஸ்ஐ அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ராஜலட்சுமியின் தாடை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவரை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. அவரை தாக்கிய பெண் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தென்காசி எஸ்பிக்கு ராஜலட்சுமியின் உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.

The post பெண் எஸ்ஐ தாக்கியதில் தூய்மை பணியாளர் தாடை உடைந்தது appeared first on Dinakaran.

Tags : KDC Nagar ,Paunraj ,VK Putur, Tenkasi district ,Rajalakshmi ,Asaripallam ,Nagercoil… ,
× RELATED பாமக மாஜி நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு