சேலம், டிச.28: சேலம் வின்சென்ட்டில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சி ெமாழிச்சட்ட வார நிகழ்ச்சி நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் ஜோதி வரவேற்றார். மாவட்ட மைய நூலக அலுவலர்(பொ) பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் செண்பகலட்சுமி, சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்காப்பு மன்ற தலைவர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் ஆட்சி மொழிச்சட்டத்தை எளிதாக அறியும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள், நூலக வாசகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் சாந்தி நன்றி கூறினார்.
The post ஆட்சி மொழி சட்ட நிகழ்ச்சி appeared first on Dinakaran.